இந்த மதிப்பெண் கணக்கீட்டு முறையை எதிர்த்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் சங்கங்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய் யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஏ.எம்.கன்வீ ல்கர் தலைமையிலான அமர் வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில்,"மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிக முக் கியமான இந்த பன்னிரண் டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் வெயிட்டேஜ் முறையை கைவிட்டு, தேர்வு களை நடத்த முன்வரவேண்டும்” என கூறப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,”நீங்கள் தேர்வை நடத்த வேண்டும் என சொல்கிறீர்கள், ஆனால் மாணவர்கள் அச்சம் அடை கின்றனர். கொரோனா போன்ற ஆபத்தான காலத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அதிக மதிப்பெண்கள் வேண்டும் என்றால் மாணவர்கள் விருப்பத்தேர்வுக்கு அனும திக்கப்படுவார்கள். அதில் மனுதாரர்களுக்கு என்ன பிரச்சனை என்பது புரியவில்லை” என கேள்வியெழுப்பினர்.
மத்திய அரசு தரப் பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணு கோபால், "கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் இந்த ஆபத்தான சூழலில் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வை நடத்த வாய்ப்பு கிடையாது.மாணவர்களின் உயிர் என்பது விலை மதிப் பற்றது. இந்த இக்கட்டான சூழலில் அவர்களை கட்டா யம் தேர்வு எழுதச்சொல்லி நிர்பந்திக்க முடியாது. தேர்வு எழுத வரும் ஒரு மாணவ ருக்கு ஏதாவது ஆனாலும் கூட அந்த மாணவர்களின் பெற்றோர்கள் தேர்வு நடத் தும் அமைப்பிற்கு எதிராக நீதிமன்றத்தை நாடி விடு வார்கள். அது இதைவிட பெரும் சிக்கலை ஏற்படுத்தி விடும். அதனால் தேர்வை ரத்து செய்த முடிவு என்பது சரியானதே” என தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்க ளையும் கேட்ட நீதிபதிகள் உத்தரவில்,” இந்த விவகா ரத்தை பொருத்தமட்டில் பல்வேறு கல்வி நிபுணர்க ளின் ஆலோனைகளை மேற்கொண்டு தான் 12ம் வகுப்பு தேர்வை சி.பி.எஸ்.இ நிர் வாகம் ரத்து செய்துள்ளது. அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. இதுமாண வர்களின் பொது நலனை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட முடிவாகும். இதில் முன்னதாக மாண வர்களுக்கான மதிப்பெண் களை வழங்கும் மதிப்பீட்டு முறை குறித்து சிபிஎஸ்இ நிர்வாகம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றம் அங்கீகரிக்கிறது.
அதனால் 10,11,12ம் வகுப்பு ஆகியவற்றில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் விகிதாச்சாரத்தை அடிப்ப டையாகக் கொண்டு வழங்கப்படும் மதிப்பெண் களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து ரிட் மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது என உத் தரவிட்ட நீதிபதிகள், தேர்வு முடிவுகளை ஜூலை 21ல் அறிவிக்கலாம். ஒருவேளை மாணவர்களுக்கு வழங் கப்படும் மதிப்பெண்ணில் திருப்தி இல்லை என்றால் அவர்கள் இம்ப்ரூமண்ட் தேர்வை எழுதலாம்” என உத்தரவிட்டனர்