சென்னை , ஜூன் 2: தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்படும் போது அரசு நிர்ணயம் செய்த கட்டணம் தவிர கூடுதல் கட்டணம் வசுலிக்க கூடாது. அது போல இதர கட்டணங்களும் வசுலிக்க கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாகவும், ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள், பாலியல் வன் கொடுமை தடுப்பு வழிகாட்டு நெறிமுறை கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, தனியார் மெட்ரிக்குலேஷன் , மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி கள், சிபிஎஸ்இ. ஐசிஎஸ்இ. உள்ளிட்ட பள்ளிகளில் 2021-2022ம் கல்வி ஆண்டில் மேற்கொள்ளப்படும் புதிய மாணவர்சேர்க்கை, மாற்றுச்சான்று வழங்குதல் , கல்விக் கட்டனம் வருவித்தல் உள்ளிட்ட பிற செயல்பாடுகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது, அதன் விவரம் வருமாறு:
- தொடர் அங்கோரம் புதுப்பிக்காத அனைத்துவகை பள்ளிகள், உடனடியாக தங்கள் பள்ளியின் அகாரத்தை புதுப்பிக்க உரிய முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
- கல்விக் கட்டணத்தை பொருத்தவரையில் 75 சத வீதம் மட்டுமே பெறப்பட வேண்டும்.
- கட்டண குழு நிர்ணயம் செய்துள்ள கட்டண விவரங்கள், 75% கட்டணம் பெறுவது தொடர்பான விவரங்களை பள்ளிகளில் தகவல் பலகையில் ஒட்ட வேண்டும்.
- 11ம் வகுப்பு சேர்க்கையின் போது அரசு தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி மாணவர்களுக்கு பாடப்பிரி வுகளை ஒதுக்க வேண்டும்.
- இணையத்தில் இருந்து மாற்றுச் சான்று தரவிறக்கம்செய்து வழங்க வேண்டும். 2013-2014 முதல் 2020-2021 வரை கட்டாய கல்வி உரிமைச் சட்ட விதிப்படி சேர்க்கப்பட்ட அனைத்து குழந்தைகளின் பெயர்களும் இஎம்ஐஎஸ் இணையத்தில் அந்த குழந்தைகள் பதிவு செய்யப்பட்டுள்ளார்களா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். அதன் அடிப்படை பில் தான் கட்டண கேட்புத் தொகை வழங்கப்படும்.
- அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் வகுப்புக்கு நிர்ணயிக்கப்பட்ட கால நேரத்தை தவிர கூடுதல் நேரம் பாடம் நடத்தக்கூடாது அன்லைன் வகுப்பில் ஈடுபடும் மாணவர்கள் தரப்பில் இருந்து எந்த புகாரும் வராத வகையில் வகுப்பு நடத்த வேண்டும்.
- எந்த காரணத்துக்காக வும் சார்ந்த வகுப்பில் ஆன் லைன் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களை நீக்கவோ, தவிர்க்கவோ கூடாது.