அக். 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை பள்ளிக்கு வருகை புரிய தேவையில்லை

அக். 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிய தேவையில்லை 



1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை பள்ளிக்கு வருகை புரிய தேவையில்லை என்று தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு. 

     இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செயல்முறையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு அக்டோபர் ஆறாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை என்னும் எழுத்தும் சார்ந்த இரண்டாம் பருவத்திற்கு ஒன்றிய அளவில் பயிற்சி வகுப்புகள் மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது.

     எனவே அந்த நாட்களில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிய தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 6.10.2022 முதல் வழக்கம்போல் பள்ளி செயல்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. 

    இது தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் மட்டுமே எனவே 10 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான விடுமுறை குறித்த எழுத்துப்பூர்வ ஆணை எதுவும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை வாய்மொழியாக மட்டுமே விடுமுறை தேதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

Post a Comment

Previous Post Next Post
Loading...