தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு

 தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு

     தமிழகத்தில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையாக அக்.12ஆம் தேதி வரை நீட்டிப்பு.

   தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அக் .10 முதல் 12 வரை எண்ணும் , எழுத்தும் பயிற்சி நடப்பதால் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது - தொடக்கக் கல்வித்துறை.

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு !

   தமிழகத்தில் 1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 12ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

   தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சி அக்டோபர் 10 முதல் 12 வரை நடப்பதால் விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அக்டோபர் 6 முதல் 8 வரை எண்ணும் எழுத்தும் பயிற்சி என அறிவிக்கப்பட்டு அக்டோபர் 9 வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

   முன்னதாக, 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 9ம் தேதி வரையிலும் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 5ம் தேதி வரையிலும் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அரையாண்டு தேர்வு எப்போது? 

    1 முதல் 10ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு டிசம்பர் 19ம் தேதி முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்கும் என்றும், 11 12ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 16ம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 

    டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை என்றும் ஏற்கனவே  அறிவிக்கப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post
Loading...