தமிழகத்தில் கொரோனாவால் இறந்த ஆசிரியர்களின் விவரங்களை சமர்பிக்க வேண்டும் என்று சிஇஓக்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத் தில் கொரோனா பாதிப்பு 2வது அலையில் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டது
இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார், வருவாய்த் துறையினர், பொதுமக்கள், குழந்தைகள் என்று பெரும் பாலானோர் பலியாகினர். இப்படி கோரத்தாண்டவமாடிய கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு தற்போதும் தளர்வுகளுடன் அமலில் உள்ளது.
இந்நிலையில், கொரோனா 2வது அலை யில் தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் எத்தனை பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் எத்தனைப் பேர் என்ற விவரங்களை கணக்கெடுத்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று சிஇஒக்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அதன் படி மாவட் டங்கள் தோறும் உள்ள அனைத்து அரசு, ஆதி திராவிடர் நலப்பள்ளி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து கொரோனா பாதிப்பினால் இறந்த ஆசிரியர்களின் விவரங்கள் சேகரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தமிழகத்தில் கொரோனா பாதிப்பினால், இறந்த ஆசிரியர்களின் விவரங்கள் பள்ளிகல்வித்துறை மூலம் கேட்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கும்போது, ஆசிரியர்கள் காலிப்பணியிடம் இருந்தால் அதனை நிரப்புவதற்காக இந்த கணக்கெடுப்பு தேவை' என்றனர்.