தனியார் பள்ளிகள் விடுமுறை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

 தனியார் பள்ளிகள் விடுமுறை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழ்நாடு அரசு

கனியாமூர் கலவரத்தை கண்டித்து தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநில தலைவர் நந்தகுமார் அறிவித்து இருந்தார்.


இந்நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன் அறிவிப்பு பெறாமல் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் விடுமுறை அறிவித்தால் சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் நடவடிக்கை எடுப்பார்கள்.

விதிகளை மீறி விடுமுறை விட்டால் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள்  இயக்குநரகம் எச்சரிக்கை! 

நாளை அனைத்து மெட்ரிக் பள்ளிகள் நடக்க அனைத்து முதன்மைக்கல்வி அலுவலகர்கள் உறுதி செய்ய வேண்டும்.    மெட்ரிக் பள்ளி இயக்குநர்  கருப்பசாமி அவர்கள் அறிவிப்பு.

Post a Comment

Previous Post Next Post
Loading...