சென்னை ,ஜூன் 14:பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்குவது குறித்து ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட குழுவில் மூன்று தலைமையாசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் மாநில பாடத்திட் டத்தில் படித்த பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த மாண வர்களுக்கு மதிப்பெண்கள் வழங் குவது குறித்து அரசுக்கு வழிகாட் டுதல் நெறிமுறைகளை வழங்குவ தற்காகப் பள்ளிக் கல்வித்துறை, உயர் கல்வித்துறை, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்படும்.
அவர்கள் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து ஆய்வு செய்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், அதனடிப்ப டையில் பிளஸ் 2 வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண் வழங்கப்படும் என, முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
திருப்பூர், திருநெல்வேலி, சென்னை : இந்தக் குழுவில் தலைமை ஆசிரியர்கள் பிரிவில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி, சுயநிதிப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர். இது குறித்த பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் இதுதொடர் பாக வெளியிட்ட அறிவிப்பு:
திருப்பூர் ஜெய்வாபாய் மாதிரி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லா அமலோற்பவமேரி, திருநெல்வேலி சங்கர் உதவி பெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் கணே சன், சென்னை ஆழ்வார் திருநகர் செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி முதல்வர் ஜேம்ஸ் சத் தியராஜ் ஆகியோர் பிளஸ் 2 வகுப் புக்கு இறுதி மதிப்பெண்கள் வழங் குவது சார்ந்து அமைக்கப்பட்ட குழுவுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட தலைமையாசிரி யர்கள் பிளஸ் 2 வகுப்பு மாணவர் களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துக் கள் தெரிவித்து, குழுவின் தலைவ ரால் வழங்கப்படும் பணிகளை உட னுக்குடன் மேற்கொண்டு ஆலோ சனைக் கூட்டங்களில் தங்களின் கருத்துகளை வழங்க வேண்டும்.
Naa school exam eluthe irukum atha mark pottaga
ReplyDelete